×

எகிப்து நாட்டில் இருந்து பரப்பப்பட்டது குழந்தை கடத்தல் தொடர்பாக இணையத்தில் பரவும் வீடியோ போலியானது: சென்னை காவல்துறை விளக்கம்

சென்னை: குழந்தை கடத்தல் தொடர்பாக இணையத்தில் பரவும் வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நாட்டில் இருந்து பரப்பப்பட்டது என்றும், இதனால் யாரும் பீதியடைய வேண்டாம் என சென்னை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் கடந்த 2 நாட்களாக குழந்தை கடத்தல் தொடர்பாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பர்தா அணிந்து வந்த ஒரு நபர் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு சிறுவனிடம் பேசுவது போல், மயக்க மருந்து கொடுத்து பின் வாகனத்தில் கடத்தி செல்வது போல் காட்சிகள் இருந்தது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை கவனத்திற்கு வந்தது.

அதன்படி மாநகர காவல்துறை சைபர் க்ைரம் போலீசார், இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் கடந்த 2022ம் ஆண்டில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது என்றும், எகிப்து நாட்டில் உள்ள சில இளைஞர்களால் காட்சிப்படுத்தப்பட்ட வீடியோ என்றும் விசாரணையில் தெரியவந்தது. எனவே பொதுமக்கள் இணையத்தில் பரவும் போலி வீடியோவை யாரும் நம்ம வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

The post எகிப்து நாட்டில் இருந்து பரப்பப்பட்டது குழந்தை கடத்தல் தொடர்பாக இணையத்தில் பரவும் வீடியோ போலியானது: சென்னை காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Egypt ,Chennai ,Chennai Metropolitan Police ,
× RELATED சென்னையில் விதிமீறலில் ஈடுபட்ட 1,022...